சர்வ ஜன வசிய மை செய்முறை இரகசியம் - Sarva Jana Vasiya Mai Seimurai Secret

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

சர்வ ஜன வசிய மை செய்முறை இரகசியம்




சர்வ ஜன வசிய மை செய்முறை இரகசியம் 

வெள்ளெருக்கு முலிகை வேருக்கு ஞாயிற்றுகிழமை மாலை 6 to 6.30 அளவில்  தாமரை நுலால்   காப்பு கட்டி வெற்றிலை பாக்கு  தேங்காய், வாழைப்பழம்,கற்பூரம்,சாம்பிராணி, (தீபம் தூபம் ) காண்பித்து விட்டு கணபதி மூல மந்திரம் 108, முறை ஜெபிக்கவும்.

 

கணபதி மூல மந்திரம்

ஓம் கங் சிங் குங் கணபதி லோக வசீகரம் பகவதே

108, முறை ஜெபித்து விட்டு மஞ்சள் நீர் கொண்டு முலிகை மேல் தெளித்து விட்டு வந்து விட வேண்டும்.


பின்பு மீண்டும் செவ்வாய் கிழமை இரவில் சென்று இதே மந்திரத்தை 108, முறை செபித்து வெள்ளருக்கு மூலிகை வேரை கற்பூரம், சாம்பிராணி,(தீபம் தூபம்) காண்பித்து பறித்து வரவும்.

இதன் வேரை மட்டும் வெட்டி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு புது மண் ஓட்டில் போட்டுஅடுப்பில் வைத்து எரித்து கருக்கவும். இதனுடன் கோரோஜனை,குங்குமப்பூ,கஸ்தூரி, புனுகு,பச்சை கற்பூரம் இந்த ஐந்து சரக்குகளும் சிறிது சேர்த்து அம்மியில் விட்டு அரைக்கவும். பிறகு இந்த வசிய மையை ஒரு செம்பு,அல்லது வெள்ளி டப்பியில் எடுத்து வைக்கவும்.

பிறகு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காலையில் பூஜை அறையில் ஒரு வாழை இலையில்  வெற்றிலை பாக்கு,  தேங்காய், வாழைப்பழம்,அவல்,பொரி,கடலை வைத்து அதன் நடுவில் வசிய மை டப்பியை வைத்து கற்பூரம்,சாம்பிராணி,(தீபம் தூபம் ) காண்பித்து விட்டு மல்லிகைப் பூவினால் கணபதி வசிய மூல மந்திரம் ஒவ்வொன்றாக கூறி வசிய மை டப்பியின் மேல் போடவும். வசிய மந்திரம் 1008, முறை ஜெபித்து முடிக்க வசிய மைக்கு உயிர் வரும். இதுவே சர்வ ஜன வசிய மை ஆகும்.

 

கணபதி வசிய மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்,கிலவும் கம் கணபதயே வர வரத சர்வ ஜனமே என் வசமானாய ஸ்வாக

1008, முறை ஜெபிக்கவும்.

பின்பு தினமும் காலையில் குளித்து விட்டு வெளியில் செல்லும் போது  சர்வ ஜன வசிய மையை சிறிது எடுத்து நெற்றியில், அல்லது தலை உச்சியில் வைத்து செல்ல சகலரும் வசியமாவர்கள்.

நன்றி

இறையருள்,மாந்திரீக ஆசான்

அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்

சிறுமலை புதூர், திண்டுக்கல் –

தமிழ்நாடு – இந்தியா

செல் : 9095590855 - 9655688786

அடங்காத கணவனை அன்பாக நடக்க வைக்கும் மூலிகை வசிய இரகசியம் -Husband Vasiyam

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

 அடங்காத கணவனை அன்பாக நடக்க வைக்கும் மூலிகை வசிய இரகசியம்











சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சீதேவி செங்கழுநீர் மூலிகையின் அருகில் சென்று அதனை சுற்றி சுத்தம் செய்து மூலிகையை சுற்றி ஒரு குழி பறித்து நீர் ஊற்றி ஒரு வாழை இலையில் வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம்,அவல்,பொரி,கடலை,நாட்டு சர்க்கரை வைத்து மஞ்சள்தூள் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையா ருக்கு பூ சூடி சாம்பிராணி தூபம், கற்பூர தீபம் காண்பித்து விநாயகரையும் மகாலட்சுமியையும் நினைத்து வணங்கி ஒரு மஞ்சள் நூல் நடுவில் விரலி மஞ்சளை வைத்து முடிச்சிட்டு இதை மூலிகையில் தாலி கட்டுவது போல் மூன்று முடிச்சு போட்டு விடவும்.

பின்பு ஓம் மூவர் இட்ட சாபம்,முனிவர் இட்ட சாபம் அனைவர் இட்ட சாபம் அகண்டு போகச் சிவ என 51,முறை மந்திரம் சொல்லி சிறிது மஞ்சள்நீர் எடுத்து மூலிகை மேல் தெளிக்கவும்.மூலிகை சாபம் விலகும்.

 பின்பு  ஓம் மூலி மகா மூலி உயிர் மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சுவாக” என 51,முறை மந்திரம் சொல்லி சிறிது அருகம்புல்லும் விபூதியும் எடுத்து மூலிகை மேல் போடவும் மூலிகைக்கு உயிர் வரும்.

பின்பு மூலிகையை ஆணி வேருடன் பறித்து வந்து இந்த வேரும் சிறிது ஒரிஜினல் கோரோசனையும் சிறிது தேனும் விட்டு அரைத்து வைத்துக்கொண்டு மனைவியானவள் தனது நெற்றியில் பொட்டுவைத்துக் கொண்டு வர முரட்டு சுபாவம் உள்ள கணவன் இவள் சொல்லுக்கும், பேச்சுக்கும் அடங்கி கட்டுப்பட்டு இருப்பான். இந்த முறையில் நூற்றுக்கண க்கான பேருக்கு செய்து கொடுத்து அனுபவத்தில் வெற்றி கண்ட முறையாகும்.

குறிப்பு : இந்த வசிய முறைக்கு ஒரிஜினல் கோரோசனையும், ஒரிஜினல் தேனும் அவசியமாகும்.  


இறையருள், மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்  
சிறுமலை புதூர், திண்டுக்கல் – 624003
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம் - கிளை
NO,6 புஷ்பக் நகர் – A.M ரோடு
ஸ்ரீரங்கம்  P.O - 620006  - திருச்சி
தமிழ்நாடு இந்தியா
செல் ; 9095590855 -9655688786


குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:


குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை





நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள் ளனர்.

சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும்.  இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை சேகரித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து ஒரு படி அளவு எடுத்து ஒரு பானையில் போட்டு ஐந்து  படி நீர் விட்டு கலந்து பதினைந்து நாள் ஊறவைத்து பிழிந்து சக்கைகளை எடுத்துவிட்டு அந்த நீரை பெரிய தட்டுகளில் ஊற்றி வெயிலில் வைக்கவும்.சில நாட்களில் நீரெல்லாம் வற்றி கருஞ்சிவப்பும், நீலமும் கொண்ட நிறத்தில் மை போல் மாறும்.அதை தேங்காய் ஓட்டில் ஊற்றி வைத்துக்கொண்டு  தினமும் சில துளிகள் நீர் விட்டு குழைத்து சிறு குழந்தைகளுக்கும், பெண்களும் திலகமாக (பொட்டு) அணிந்தால் சகல கண் திருஷ்டிகளும், கண் திருஷ்டியினால்  வந்த தோஷங்களும்,பிரேத காற்று சேஷ்டைகள் விலகிப்போய் விடும்.

பேய், பூத கணங்கள் அருகில் வர அஞ்சும்.அற்புத சக்தி வாய்ந்த திலகம் இதுவாகும்.

குறிப்பு : தற்போது சில இடங்களில் இதுபோன்று ஒன்றை தேங்காய் ஓட்டில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.அது உண்மையானதா என்பது கேள்விக்குரியது ஆகும்.உண்மையாய் தயாரித்த அஞ்சனம் மட்டுமே நாம் மேற்கூறிய அற்புத சக்தியை கொண்டதாக இருக்கும்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை வெட்டி எடுக்கும் போது  அதிலிருந்து நமது இரத்தம் போலவே சிவப்பு நிறத்தில் வடியும்.

நன்றி !

இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம், சிறுமலை புதூர்,

திண்டுக்கல் – 624003 
செல் - 9095590855 - 9655688786

வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன - Vasiya Marunthu

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன  - Vasiya Marunthu


 


ஒருவர் தனக்கு பிடித்தமான ஒருவரை தனது சொல்லுக்கும்,செயலுக்கும் கட்டுப்பட்டு அடங்கி இணக்கமாக இருக்கச்செய்வதற்கு பயன் படுத்தும் ஒரு மூலப்பொருள்தான் வசியமருந்து எனப்படும் இடு மருந்து ஆகும்.


கணவன் மனைவி வசியத்திற்கும், காதலன் காதலி வசியத்திற்கும், நண்பர்கள் வசியத்திற்கும், உறவினர்கள் வசியத்திற்கும், வசிய இடு மருந்தை பிரயோகம் செய்வார்கள்.


நம் தமிழகத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண, இலக்கிய காலங்களில் மக்களின் பயன்பாட்டில் வசிய இடு மருந்து இருந்துள்ளது என்பது ஓர் அதிசய உண்மையாகும்.


பண்டையகால சித்தர்கள் நூல்களிலும், பரம்பரையாக கையாண்டு வரும் மருத்துவம், மாந்திரீக ஓலைச்சுவடிகளிலும் வசியமருந்து செய்முறைகளும், வசியமருந்தை முறிக்கும் முறைகளும் ஏராளமாக காணக்கிடைக் கின்றன.


வசியமருந்து செய்முறை மூன்று பிரிவுகளாக உள்ளது.  
1, மூலிகை பொருள்களினால் தயாரிப்பது
2, உயிர் ஜீவ ஜந்துக்களினால் தயாரிப்பது
3, பாஷாணங்கள், மற்றும் உப்பு வகைகளால் தயாரிப்பது 

மேற்கண்ட  மூன்று வகைகளிலும் வசிய இடு மருந்து செய்முறைகளில்  பக்க விளைவுகள் ஏற்படுத்தும்  வசிய மருந்தும், பக்கவிளைவுகள் இல்லாத  வசிய  மருந்து என  இரண்டு வகைகளில் வசிய இடு மருந்து  தயாரிக்கப்படுகிறது.


மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும்  வசிய இடு மருந்திற்கு  வசிய மந்திரங் கள்   மூலம் பூஜையில் வைத்து  உருவேற்றப்படுகின்றது.


அடுத்த  பதிவுகளில் : 

வசிய மருந்தின் உண்மை இரகசியம், 
வசிய மருந்தால்   ஏற்படும் பாதிப்புகள்,
வசிய இடு மருந்தை  முறிக்கும்  முறையும், 
வசியமருந்தை  உடலிலிருந்து  வெளியேற்றும்  முறை,
வசியமருந்துகள் உடலில்  இருப்பதை கண்டறியும்  முறை, 
போன்றவைகளை  ஒவ்வொன்றாய்  காணலாம்.



நன்றி !
இறையருள், மாந்திரீக  ஆசான்  
அகத்தியர்  குருகுலம்  யோக  ஞான  பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை  புதூர், 
திண்டுக்கல்  - 624003  / தமிழ்நாடு  - இந்தியா
cell : 9095590855  - 9655688786


பேய் பிசாசு விலகி ஓட ,சர்வ ஜன வசியம் உண்டாக தாயத்து செய்முறை - Jana Vasiyam

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels: ,

பேய் பிசாசு விலகி ஓட ,சர்வ ஜன வசியம் உண்டாக தாயத்து செய்முறை










வளர்பிறையில் வரும் செவ்வாய்கிழமை அன்று முடக்கொத்தான் மூலிகையின் அருகில் சென்று மஞ்சள் நூலால் கன்னிநூல் காப்பு கட்டி,மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 51,முறை செபித்து, பின்பு மூலிகை உயிர் கொடுக்கும் மந்திரம்  51,முறை செபித்து மஞ்சள் நீர் தெளித்து வாழைப்பழம், தேங்காய், பொங்கல் படையல் வைத்து தூபம், தீபம் காண்பித்து இம்மூலிகையின் பிரத்யேக மந்திரம் :

        ஓம் மாசி மாசி தூமாதேவி வலிசுடு வலிசு அம் சிவ

என 1௦௦, முறை உரு செபித்து இம்மூலிகையின் வேரை பறித்துக் கொள்ளவும்.
தங்கத்தால் தாயத்து ஒன்று செய்து அதில் இம்மூலிகையின் வேரை அதனுள் அடைத்து தூபம் காட்டி வலது கையில் அல்லது கழுத்தில் கட்டிக்கொள்ள சர்வ ஜனம் வசியம் ஆகும்.பேய் பிசாசு இவனைக்கண்டால் அலறி ஓடும்.


நன்றி !
இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம் – [ சஞ்சீவிமலை ]
சிறுமலை புதூர்,
சிறுமலை திண்டுக்கல் 624003       
செல் ; 9095590855 - 9655688786


பதிவுகள் தலைப்பு

மாந்திரீக முறையில் தீர்வுகள் மற்றும் பயிற்சிகள்

mantra,vasiyam,manthrigam,vasiya mai,Mantrigam,tamil manthrigam vasiyam,manthrigam training,kerala manthrikam,manthrigam in tamil,manthrigam tamil,malayala manthirigam in tamil,manthrigam books in tamil,manthiram seivathu eppadi,manthrigam vasiyam,kerala vasiyam,tamil vasiyam,vasiyam in chennai,vasiya marunthu,vasiyam in tamil,vasiyam seivathu,tamil manthrigam seivathu eppadi,manthrigam in tamil nadu,manthrigam tamil,manthrigam training, manthrigam class,manthrigam books in tamil,manthrigam vasiyam,manthrigam vasiyam tamil, manthrigam,manthrigam books in tamil pdf,manthrigam books,manthrigam books in tamil pdf free download,manthrigam class in chennai,manthrigam in tamil,manthrigam in chennai,manthrigam in coimbatore,manthrigam in madurai,manthrigam in kerala,manthrigam kerala,manthrigam kerala vasiyam,mantrigam karka,manthrigam manthiram tamil,manthrigam ragasiyam,manthrigam ragasiyam tamil,manthrigam siddhar,manthrigam seimurai,manthrigam specialist in chennai,manthrigam specialist in kerala,manthrigam tamil books free download,manthrigam tamil books,manthrigam training in chennai,manthrigam tamil pdf,manthrigam training tamil,manthrigam vasiyam chennai,manthrigam video,manthrigam youtube, vasiyam,vasiya mai,vasiyam seivathu eppadi,vasiya mooligai,vasiyam in tamil,vasiya mantra,vasiyam seivathu,vasiya manthiram,vasiya porutham,vasiya marunthu in tamil, vasiya manthiram tamil,vasiya anjanam,vasiya chakram,vasiya marunthu,vasiya mai in chennai,vasiya mai seivathu eppadi,vasiya marunthu removal,vasiya manthiram in tamil,vasiya kattu manthiram tamil, vasiya kattu manthiram,vasiya marunthu tamil,pen vasiya manthiram,raja vasiya manthiram, vasiya thayathu,tamil vasiya manthiram,vasiya mai tamil,vasiya muthirai, vasiya marunthu removal, vasiya marunthu tamil,vasiya marunthu eduthal,vasiya marunthu removal in tamil,vasiya marunthu seivathu eppadi,vasiya marunthu seimurai,vasiya marunthu for husband,vasiya marunthu seimurai in tamil,vasiya marunthu side effects,vasiya marunthu in chennai,vasiya marunthu,vasiya marunthu in tamil,vasiya marunthu in stomach, vasiya mai seivathu eppadi tamil,vasiya mai seivathu eppadi, vasiya mai seimurai,vasiya mai in chennai,vasiya mai in kollimalai,vasiya mai kerala,vasiya mai preparation,vasiya mai in coimbatore,vasiya mai,vasiya mai in tamil,vasiya mai in madurai, vasiya mai preparation in tamil,vasiya mai tamil,vasiya mai thayarikum murai,vasiya mai vendum, videos on Manthrigam siddhar Channel.

Translate

Powered by Blogger.

இமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV